search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா போராட்டம்"

    • மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது.
    • ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது. இந்த ஏரி மாளிகை மேடு ஊராட்சிக்கு சொந்தமானது. இங்குள்ள கருவேல மரங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டுஏலம் நடத்திமரங்களைவெட்டி அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து இருந்தார். ஏலம் விடாமலே ஏரியிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய குழு துணை தலைவருமான ஜான்சி ராணி தென்னரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி இருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை அண்ணா கிராமம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் திருநாவுக்கரசு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு துணை தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்என்று அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது.
    • பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர், கிளை ஊராட்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரமேஷ், வெங்க டேஷ், சாமுராய் குரு, அசோகன் உள்ளிட்டோர், பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு, பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. போதுமான நிதியில்லை என்று ஒன்றிய தலைவர் பதில் அளித்தார். இதை யடுத்து, பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அனைத்து கவுன்சி லர்களும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, ஒன்றிய அலுவலக நுழைவா யிலில் அமர்ந்து கோஷமிட்ட படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலு வலகத்தில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிைறவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
    • ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு, பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும். ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    முன்னதாக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 

    • மாற்றுத்திறனாளி பெண் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நிபந்தனைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி உடனடி கடன் வழங்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண்டான பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஷபானா காதர் என்ற மாற்றுத்திறனாளி பெண் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கூட்டுறவு வங்கிகளின் விதிமுறைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கடன் கோரும் போது இரண்டு அரசு ஊழியர்கள் அவர்களின் ஆதார், குடும்ப அட்டை, வங்கிப் புத்தகம், இரண்டு புகைப்படம், அரசின் சம்பள சான்று என எட்டு வகையான சான்றுகளை கொடுக்க வேண்டும்.

    அது மட்டும் இன்றி ரூ.100 பத்திரத்தில் உறுதிமொழி படிவம் கொடுக்க வேண்டும் எனக் கூறி கடன் கோரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.

    கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நிபந்தனைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி உடனடி கடன் வழங்க வேண்டும் என கோரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோரிக்கை அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டிப்பாளையம் வரை சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நொய்யல் கரையோரம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள சாயப்பட்டறை வீதியில் 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார், செயற்பொறியாளர் கோவிந்த பிரபாகர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை சென்றனர்.

    அப்போது ஆக்கிர மிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் . இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வும் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் போரா ட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக குண்டும், குழியுமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அரைத்து செல்லவும், வேலைக்கு செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ, கார், போன்ற வாகனங்கள் இந்த பகுதிகளுக்குள் வர மறுக்கின்றன.

    மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வண்டி வந்து, செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 60-க்கும் மேற்பட்டோர் குழந்தை குட்டிகளுடனும், பள்ளி சிறுவர்களுடனும் ஓசூர் தாலுக்கா அலுவலகத்திற்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெளியே சென்றிருந்த தாசில்தார் கவாஸ்கர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தார். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை சூழ்ந்து தங்கள் பிரச்சினைகளை முறையிட்டனர். மேலும், தங்கள் பகுதிக்கு மெயின் ரோட்டிலிருந்து, பாவை கார்டன் வரை உள்ள 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சகோதரிகள் 2 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று இரவு துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    மத்திய அரசின் ரூ.10.72 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களிடம் பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அவதூறாக பேசி தங்களை தாக்க முயற்சி செய்ததாகவும், அங்கு வந்த போலீசாரும் பா.ஜ.க.வினருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி, தங்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவதூறாக பேசியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக்கண்டித்து சகோதரிகள் 2 பேரும் கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சகோதாரிகள் கூறுகையில், எங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி மக்களிடம் கொண்டு செல்கிறோம். ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் போலீசாரும் எங்களை அவதூறாக பேசினர் என்றனர்.

    சகோதரிகளின் தர்ணா போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது. அவர்களது போராட்டத்திற்கு 5-ம் தூண் அமைப்பின் நிறுவனர் சங்கரலிங்கம் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • 8 கி.மீ. தொலைவுக்கு நடைப் பயணம் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் மற்றும் கண்காட்சி துவக்க விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி .வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்,வேளாண்மை துறை கூடுதல இயக்குனர் ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி அடைகிறது.

    கடந்த ஒரு ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயி தான். என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார்.

    அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது எனவே விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலேயே வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்றி காட்ட வேண்டும் கல்வி பொருளாதாரத்தில் நம்முடைய மாவட்டங்கள் பின்தங்கி இருந்தது.

    தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிரப்பரப்பில் நாலு சதவீதமும் மக்கள் தொகையில் ஏழு சதவீதமும் நீர் ஆதாரம் 3 சதவீதம் உள்ளது இதை வைத்துக்கொண்டு விவசாயிகள் விவசாயத்தில் வெற்றிக்கான வேண்டும்.

    சீனாவில் நம்மை விட குறைந்த அளவு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அவர்கள் நம்மை விட 2 மடங்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கடந்த 1995 முதல் 2014 வரை கடன் தொல்லையால் 2.91 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2021-ல் ஒரு நாளைக்கு 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    அடுத்தது கர்நாடகா, ஆந்திரா ,மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. விவசாயிகள் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் நிலம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்யும்போது அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் அரசுகள் இதனை கவனிக்க வேண்டும். ரூ 10 ,20 ஆயிரம் கோடி கடன் பெறுபவர்கள் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

    நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    தமிழகத்தில் ஆறு ஏரி கால்வாய்களை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை தமிழ்நாட்டில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது தற்போது 39 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஏரிகள் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலக்கிறது.

    மேட்டூர் வைகை அணைகளை தூர்வாராததால் 30 சதவீத அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது அணைகளில் இருந்து தூர்வாரி அகற்ற வேண்டும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும் தான் உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டினார்.அந்த தடுப்பணைகளை தாண்டித்தான் பாலாற்றில் வெள்ளம் வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து வேளாண் பொருட்கள் கண்காட்சியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    • 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 2 பேர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி ஆண்டிக்குப்பம் சேர்ந்தவர்கள் முருகேசன், பழனி ஆகியோர் தனது நிலத்தில் கூட்டு பட்டா நீக்க கோரியும், ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மேலும் இத்தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர்.

    ×